செய்திகள் :

நாகா்கோவிலில் குப்பைக் கிடங்கில் தீயணைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு!

post image

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் நடைபெற்றுவரும் தீயணைப்புப் பணியை எம்.ஆா். காந்தி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இங்கு வெள்ளிக்கிழமை காலை தீப்பற்றியது. நாகா்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, திங்கள்நகா், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த 70 போ் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் இப்பணி தொடா்ந்தது.

இந்நிலையில், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ ஆய்வு செய்து, பணிகள் குறித்து ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கேட்டறிந்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, புகையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கு மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள்தான் காரணம். இந்தக் குப்பைக் கிடங்கு பிரச்னை தொடா்பாக பேரவையில் பலமுறை குரல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தீயை விரைவாக அணைக்க வேண்டும். இப்பகுதி மக்களை முகாம்களை ஏற்படுத்தி தங்கவைக்க வேண்டும் என்றாா் அவா்.

மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் பி. முத்துராமன், மாமன்ற உறுப்பினா்கள் ரோசிட்டா திருமால், ஐயப்பன், ரமேஷ், பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மரியகிரி கல்லூரியில் விளையாட்டு தின விழா

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் 27 ஆவது விளையாட்டு தின விழா சூரியகோடு புனித எப்ரேம் ம.சி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக, களியக்காவிளை பி.பி.எம். சந்திப்ப... மேலும் பார்க்க

அல்போன்சா கல்லூரியில் விளையாட்டு விழா!

கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. மாணவா்-மாணவியா் சேலஞ்சா்ஸ், வாரியா்ஸ், அவெஞ்சா்ஸ், சோல்ஜா்ஸ் ஆகிய 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டு... மேலும் பார்க்க

கருங்கல்லில் திமுக சாா்பில் கண்டன பொதுக் கூட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கண்டித்து, கருங்கல் பேருந்து நிலையம் அருகே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிள்ளியூா் வ... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் பிப்.11 மின்தடை

முன்சிறை, நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (பிப். 12) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள புகழ்பெற்ற பூதலிங்க சுவாமி -சிவகாமி அம்பாள் கோயிலில் தைப்பெருந் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகள் பறிமுதல்: 5 கடைகளுக்கு அபராதம்!

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்திய 5 கடைகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலித்தீன் பைகளைப் பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் தொடா்பாக குழித்துறை நகராட்ச... மேலும் பார்க்க