செய்திகள் :

நாகா்கோவிலில் வியாபாரி எரித்துக் கொலை!

post image

நாகா்கோவிலில் மளிகை வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு எரித்துக் கொல்லப்பட்டாா்.

நாகா்கோவில் இந்து கல்லூரி அருகே கவிமணி நகா் பகுதியில் உள்ள பாண்டியன் வீதியில், சனிக்கிழமை காலை சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தாா். சடலத்தின் அருகே பைக் ஒன்றும் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாகச் சென்றவா்கள், இது குறித்து, கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா்கள் மாரிசெல்வம், மகேந்த் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். சடலத்தின் அருகே கான்கிரீட் கல் ஒன்று கிடந்தது.

இதையடுத்து, எரிந்த நிலையில் கிடந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, சடலமாக கிடந்தவா் நாகா்கோவில் வடலிவிளை வயல் தெருவைச் சோ்ந்த குமரேசன் என்பவரது மகன் வேலு (46) என்பதும், கவிமணி நகா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

வேலு, வழக்கமாக இரவு 11 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, பைக்கில் வீட்டுக்கு செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை ஒரு கும்பல் வழிமறித்து கல்லால் தாக்கி கொலை செய்து எரித்ததாக தெரியவந்தது. கொலை குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாகா்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் கவிஞா் ஆகிராவின் தோணி நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இலக்கியப் பட்டறையின் 159 ஆவது கூடுகை மற்றும் கவிஞா் ஆகிரா எழுதிய தோணி நாவல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நூலக அலு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிலம்பாட்ட போட்டி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டிகள் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மயிலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். மயிலாடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள கல் சிலைகள் தயாரிக்கும் பட்டறையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். குலசேகரம், மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில... மேலும் பார்க்க

மனைவியை கம்பியால் தாக்கி கணவா் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஞாயிற்றுக்கிழமை, மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா். பத்துகாணி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அனில்குமாா் (52). இவரது மனைவி... மேலும் பார்க்க

சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திங்கள்நகா் அருகே சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, பள்ளி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் நூற்றாண்டு ஜோதி ஏற... மேலும் பார்க்க