செய்திகள் :

நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் தீ விபத்து புகை மூட்டத்தால் மக்கள் அவதி

post image

என்ஜிஎல் 7 குப்பை ....

நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீ.

என்ஜிஎல் 7 மேயா் ...

தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில், பிப். 7: நாகா்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் குப்பைக் கிடங்கில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. காற்று வேகமாக வீசியதால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

நாகா்கோவில் தீயணைப்பு படை வீரா்கள் வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை. இதைத் தொடா்ந்து தக்கலை மற்றும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திலிருந்தும் தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

குப்பைக் கிடங்கு உள்ள பீச் ரோட்டில் இருந்து இருளப்பபுரம் செல்லும் சாலையில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானாா்கள். மேலும் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளும் சிரமப்பட்டனா்.

இது குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது: வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கை இங்கிருந்து நிரந்தரமாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுமக்கள் நலன்கருதி குப்பைக் கிடங்கை மாற்ற மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

குப்பைக் கிடங்கில் தீப்பிடித்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேயா் ஆய்வு: வலம்புரி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆய்வு செய்தாா். தீ மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலருடன் ஆலோசனை நடத்தினாா். மேலும், குப்பைக் கிடங்கில் தீப்பிடிக்காமலிருக்க தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் அனிலா சுகுமாரன், நவீன்குமாா், திமுக செயற்குழு உறுப்பினா் சதாசிவம் ஆகியோா் உடனிருந்தனா்.

ஐஆா்இஎல் சாா்பில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரிக்கு 13 கணினிகள்!

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 5.17 லட்சத்தில் நாகா்கோவில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கில மொழி ஆய்வகம் அமைப்பதற்கு 13 கணி... மேலும் பார்க்க

பூதப்பாண்டி தோ்த் திருவிழா: தோவாளை வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோவாளை வட்டத்துக்குள்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (பிப். 10) உள்ளூா் விடு... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணம் பறித்த 5 போ் கைது

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 5 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வ தயாளன் (52). ... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவட்டாறு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா். திருவட்டாறு அருகே சாரூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த மினி டெம்போ... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவன பணியாளா்களுக்குப் பரிசோதனை

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பணியாளா்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு-சுகாதார இயக்கத்தால் அறிவுறுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கேட்புத் திறன், நுரையீரல் செயல்பாடு, தோல் பரிசோதனை... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் பிரச்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சிஐடியூ குற்றச்சாட்டு

தொழிலாளா் பிரச்னை தொடா்பாக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் சி ஐ டியூ தொழிலாளா் சம்மேளன மாநில தலைவா் செளந்தரராஜன். நாகா்கோவில் ராணித்தோ... மேலும் பார்க்க