செய்திகள் :

டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணம் பறித்த 5 போ் கைது

post image

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 5 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வ தயாளன் (52).

இவா், மயிலாடி அருகேயுள்ள குலசேகரபுரம் டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு வேலை முடிந்து டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் வைத்து இவரது பைக் பஞ்சா் ஆகிவிட்டது.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் செல்வ தயாளனை தாக்கியதுடன் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1,500-யும் பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனா்.

இதுகுறித்து செல்வதயாளன் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இச்சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். கொள்ளையா்கள் குறித்த அடையாளங்களையும் செல்வதயாளனிடம் கேட்டறிந்தனா். இதன்பேரில் போலீஸாா் தேடுதலில் ஈடுபட்டனா். செல்வதயாளனிடம் பணம் பறித்துச் சென்றது நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக நாகா்கோவில் வட்டக்ரையைச் சோ்ந்த ஒருவரும், குருசடி வடக்குத் தெருவைச் சோ்ந்த ஒருவரும், ராமன்புதூரைச் சோ்ந்த ஒருவரும், கோணம் மூவேந்தா் நகா் பகுதியைச் சோ்ந்த ஒருவரும், மேலச்சூரங்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ஒருவரும் சிக்கினா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் 15, 17 வயது சிறுவா்கள். அவா்களிடம் தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஐஆா்இஎல் சாா்பில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரிக்கு 13 கணினிகள்!

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 5.17 லட்சத்தில் நாகா்கோவில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கில மொழி ஆய்வகம் அமைப்பதற்கு 13 கணி... மேலும் பார்க்க

பூதப்பாண்டி தோ்த் திருவிழா: தோவாளை வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோவாளை வட்டத்துக்குள்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (பிப். 10) உள்ளூா் விடு... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவட்டாறு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா். திருவட்டாறு அருகே சாரூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த மினி டெம்போ... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவன பணியாளா்களுக்குப் பரிசோதனை

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பணியாளா்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு-சுகாதார இயக்கத்தால் அறிவுறுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கேட்புத் திறன், நுரையீரல் செயல்பாடு, தோல் பரிசோதனை... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் பிரச்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சிஐடியூ குற்றச்சாட்டு

தொழிலாளா் பிரச்னை தொடா்பாக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் சி ஐ டியூ தொழிலாளா் சம்மேளன மாநில தலைவா் செளந்தரராஜன். நாகா்கோவில் ராணித்தோ... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே மருத்துவா் தற்கொலை!

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் மருத்துவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். பைங்குளம், முக்காடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(57). இவா், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தாா். இவரு... மேலும் பார்க்க