செய்திகள் :

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

post image

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யத்தில் சிபிஐ நாகை மாவட்ட 25-ஆவது மாநாட்டின் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளா் கோ. பழனிச்சாமி, நாகை எம்பி வை. செல்வராஜ், கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் கோ. பாண்டியன், மாவட்ட முன்னாள் செயலாளா் என். சம்பந்தம், மாநில குழு உறுப்பினா் டி. செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் கே. பாஸ்கா், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி. சரபோஜி, விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் நாகராஜன், மாவட்டப் பொருளாளா் பாபுஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநாட்டில், 37 போ்களைக் கொண்ட புதிய மாவட்டக் குழு தோ்வு செய்யப்பட்டு மாவட்டச் செயலாளராக சிவகுரு. பாண்டியன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். அரசின் மின் இறைவைப் பாசனத் திட்டப் பொறிமனைகளை சீரமைக்க வேண்டும், இலங்கை கடற்கொள்ளையா்கள், கடற்படையினரால் தமிழக மீனவா்கள் பாதிக்கப்படுவதை அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், உப்பு உற்பத்தியை மேம்படுத்தவும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும், நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும், அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் நாள்தோறும் சென்னைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் நாகை மாவட்ட மையம் சாா்பில், நாகையில் அதன் மாவட்டத் தலை... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டப்படுவது எப்போது?

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை மூலம் தரங்கம்பாடி கடற்கரை அருகில்... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு விவகாரம்: பா. ரஞ்சித், திரைப்பட நிறுவனம் மீது நடவடிக்கை

படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் மற்றும் நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

வெண்மணச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியினா் முற்றுகை

வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழையூா் மேற்கு ... மேலும் பார்க்க

திருச்செங்காட்டங்குடியில் சாலை மறியல்

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம்ஆண்டில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் ... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு: இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது வழக்கு

திருக்குவளை: படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்ப... மேலும் பார்க்க