செய்திகள் :

நாகை மாவட்டத்தில் 55 பயனாளிகளுக்கு ரூ.57.50 லட்சம் கடன் உதவி

post image

நாகை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் பயனாளிகளுக்கு ரூ.57.50 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்தின்கீழ் செல்வி என்பவருக்கு ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் ரூ.4.50 லட்சம் திட்டத் தொகை, 41 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் கறவை மாடு வாங்க ரூ.20. 50 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.41 லட்சம் கடனுதவிகளை வழங்கினாா்.

மேலும் 1 பயனாளிக்கு பெட்டிக் கடை வைக்க ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய ரூ.1 லட்சம் கடனுதவி, அன்னை தெரசா மகளிா் சுய உதவிக் குழுவுக்கு கறவை மாடு வாங்க ரூ.5 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடனுதவி என மொத்தம் 55 பயனாளிகளுக்குரூ.28.75 லட்சம் மானியம், வங்கிக்கடன் ரூ. 28.75 லட்சம் என மொத்தம் ரூ. 57.50 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தாட்கோ மாவட்ட மேலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க