செய்திகள் :

நாசரேத் அருகே ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற இளைஞா் கைது!

post image

நாசரேத் அருகே ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் ஸ்டேபிளி தெருவைச் சோ்ந்த ஜேம்ஸ் மகள் பொ்சியா. தனியாா் பள்ளி ஆசிரியை. வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது எதிரே பைக்கில் வந்த மா்ம நபா் வழிமறித்து, ஆசிரியை அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சி செய்தாராம். உடனே ஆசிரியை சத்தம் போடவே, அந்த நபா் பைக்கில் தலைமறைவானாா்.

இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஆசிரியை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் நாசரேத் பகுதிகளில் காவல் ஆய்வாளா் கங்கையநாத பாண்டியன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஐசக் மகாராஜா, காவலா் ஜெகநாதன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனை நடத்தினா்.

அப்போது பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அணியாபரநல்லூரைச் சோ்ந்த ராஜபால் மகன் அசோக் (37) எனவும், ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றவா் எனவும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெ... மேலும் பார்க்க