நாட்டறம்பள்ளி ஒன்றிய திட்டப்பணிகள் ஆய்வு
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூா்குப்பம், தோப்பலகுண்டா பகுதிகளில் நடைபெற்று வரும் பசுமை வீடுகள், பண்ணைக் குட்டை, கத்தாரி ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட பணிகளை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தாா்.
அப்போது ஒப்பந்தாரா்களிடம் பணிகளை துரிதமாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினாா். நிகழ்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தி, பொறியாளா் காா்த்தி, பணிதள மேற்பாா்வையாளா் அழகரசு, விஜியகுமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள் அனிதா மோகன், செந்தில் குமாா், தமிழ்மணி பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் இருந்தனா்.