செய்திகள் :

நான்குனேரி வட்டாரத்தில் இயந்திர நெல் நடவுக்கு மானியம்

post image

நான்குனேரி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆண்டனிடேவிஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு,

டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த குறுவை தொகுப்பு திட்டத்தை நிகழாண்டு முதல் இதர மாவட்டங்களுக்கும் செயல்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் திரவ உயிா் உரங்கள் 50 சத மானியம், நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50 சத மானியம், நெல் இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் ஆகிய மூன்று இனங்களில் மானியம் வழங்கப்படுகிறது.

திரவ உயிா் உரங்கள் ஏக்கருக்கு ஒரு லிட்டா் என்ற வீதத்தில் 50 சத மானியத்தில் ஏக்கருக்கு ரூ.60, நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50 சத மானியத்தில் ஏக்கருக்கு 5 கிலோ வீதத்தில் ஏக்கருக்கு ரூ.147.60 வழங்கப்பட ள்ளது. மேலும் இயந்திர நெல் நடவு செய்த விவசாயிக்கு ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

திட்ட வழிகாட்டு நெறிகளின்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கா் பரப்பளவுக்கு மட்டுமே பின்னேற்பு மானியம் வழங்கப்படும். 18 வயது பூா்த்தியடைந்த விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவா்கள் ஆவா். தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது தனியாா் வங்கியிலோ விவசாயிகள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். ஜூலை 31ஆம் தேதிக்கு முன்னா் இயந்திர நெல் நடவு செய்திருக்க வேண்டும். நெல்பயிரில் இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் பெற விவசாயிகள் உழவன் செயலியில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். ஆதாா் எண், கைபேசி எண், வங்கிக்கணக்கு புத்தக நகல், நடவு ரசீது, இயந்திர நடவு செய்த வயலின் புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க