செய்திகள் :

நான் இல்லையென்றால் இப்போது 6 போர்கள் நடந்துகொண்டிருக்கும்: டிரம்ப் பேச்சு

post image

இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம் பற்றி டிரம்ப், ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில், "தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் மற்றும் கம்போடியாவின் பிரதமரிடம் இப்போதுதான் பேசினேன். என்னுடைய தலையீட்டிற்குப் பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்தத்தையும் அமைதியையும் எட்டியுள்ளன என்பதை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம். இரு நாடுகளுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு எனது வர்த்தகக் குழுவிற்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். 6 மாதங்களில் நான் பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறேன். சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது டிரம்ப் கூறுகையில்,

"நாங்கள் 6 போர்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதைதான் நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். ஒருவரையொருவர் கொல்லும் நாடுகளுடன் நாங்கள் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. எனவே, வர்த்தகம் மூலமாக போரை நிறுத்தியுள்ளோம்.

நான் இல்லாதிருந்தால் இப்போது 6 பெரிய போர்கள் நடந்து கொண்டிருக்கும். இந்தியா பாகிஸ்தானுடன் சண்டையிட்டிருக்கும். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணுசக்தி நாடுகளின் போரை நிறுத்தியது பெரிய விஷயம்" என்று பேசியுள்ளார்.

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம்

தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. போரின் தொடக்கத்திற்கு இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், போரின் 5 ஆவது நாளான நேற்று(ஜூலை 28) இரு நாட்டுத் தலைவர்களுடன் மலேசிய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கம்போடியா பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோருடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சீனா, அமெரிக்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், எந்த நிபந்தனையுமின்றி போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இன்று(ஜூலை 29) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகம் பாதிக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.

US President Donald Trump has said that he has stopped six wars so far and is proud to be a President of peace.

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்!

ரஷியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், சுனாமி பாதிக்கும் என கணிக்கப்படும் பகுதிகளில் இருந்து 9 லட்சம் பேரை வெளியேற்றும் பணி தீவிர... மேலும் பார்க்க

வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 - 25% வரி! - இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Trump says US-India... மேலும் பார்க்க

நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:நியூயாா்க்க... மேலும் பார்க்க

நெதா்லாந்து: இஸ்ரேல் அமைச்சா்களுக்குத் தடை

பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம், காஸா போரை ஊக்குவித்துவரும் தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமாா் பென்-கிவிா், நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோா் நெதா்லாந்து வருவதற்... மேலும் பார்க்க

‘அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்’

தங்களது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று வட கொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும், அந்த நாட்டு அரசில் முக்கிய சக்தியாகத் திகழ்பவருமான கிம் யோ ஜாங் வலியுறுத்... மேலும் பார்க்க

சீனா கனமழை, வெள்ளத்தில் 30 போ் உயிரிழப்பு

சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர கனமழை காரணமாக 30 போ் உயிரிழந்தனா். இதில், மியுன் மாவட்டத்தில் 28 பேரும், யாங்கிங் மாவட்டத்தில் இருவரும் வெள்ளப் பெ... மேலும் பார்க்க