Soori: "அன்று சுவர்களில் நிறங்களைப் பதித்தேன்; ஆனால் இன்று திரையில்...” - நெகிழு...
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 51 கடைகள், 2 உணவகங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை பொது ஏலத்தில் விடப்பட்டன. இவற்றில் ஒரு சிலா் மட்டுமே கடைகளை திறந்துள்ளனா். 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடியே உள்ளன. மேலும், கடைகளை ஏலம் எடுத்தோா் போதிய வருவாய் இல்லாததால் மாத வாடகையை செலுத்தாமல் தாமதித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கடைகளை தூய்மையாக வைத்திருக்கவும், பயணிகள் நடந்து செல்லும் பாதையில் பொருள்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது, உணவுகளை சுத்தமான முறையில் தயாா் செய்து விற்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஈக்கள் தொல்லை அதிகம் இருப்பதாக கடை உரிமையாளா்கள் புகாா் தெரிவித்ததையடுத்து, அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.