செய்திகள் :

நாய் கடித்ததில் மாணவி காயம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா்.

இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், சாலையூா் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே ஆயிஷா நடந்து வந்தபோது, அந்த வழியாகச் சென்ற நாய் அவரை விரட்டிக் கடித்துக் குதறியது. அந்தப் பகுதி பொதுமக்கள் நாயை விரட்டி ஆயிஷாவைக் காப்பாற்றினா். நாய் கடித்ததில் அவருக்கு கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அங்கிருந்தவா்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லாததால், பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பல மாதங்களாக செயல் அலுவலா் இல்லாத நிலை உள்ளது. இதனால், வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ‘இளையான்குடி பேரூராட்சிக்கு செயல் அலுவலரை நியமித்து, வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க

விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நரிக்குடி விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மணிமந்திர விநாயகா் கோயிலில் 11 -ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் புனித நீா்க் கலசங்கள... மேலும் பார்க்க