செய்திகள் :

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்: பல்வேறு தொழிற்சங்கங்கள் பற்கேற்க முடிவு

post image

சென்னை: நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயா்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (ஜூலை9) நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கு தமிழகத்திலுள்ள தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன.

இந்தப்போராட்டத்தில் தமிழகத்தில் ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் எனப் பெரும்பாலானானோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய, போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் கூறும்போது, மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இப்போராட்டத்தில் குறிப்பாக, மின்பணிகள், அரசுப் போக்குவரத்து சேவைகள், வங்கிப் பணிகள், அரசு அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். தொழிலாளா்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெறும் என்றனா்.

ஆா்ப்பாட்டம்: வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை சென்னையிலுள்ள அனைத்து பணிமனைகளின் முன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ... மேலும் பார்க்க

மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா். இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க