செய்திகள் :

நிதியமைச்சர் நிர்மலா பெயரில் போலி வீடியோ; ரூ.33 லட்சம் இழந்த காங்கிரஸ் நிர்வாகி.. என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 50 வயதான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆன்லைன் வர்த்தகம் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரின் வாட்ஸ் அப்பிற்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரபல தொழிலதிபர் ரிலையன்ஸ் அம்பானி ஆகியோர் ஆன்லைன் முதலீடு குறித்து பேசும் வீடியோ காட்சியைப் பார்த்த அவர் அந்த லிங்கில் இ- மெயில் ஐடியைப் பகிர்ந்திருக்கிறார்.

cyber crime

சிறிது நேரத்திலேயே அவரைத் தொடர்பு கொண்ட நபர்கள் சிலர், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் இந்த முதலீட்டில் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதனை நம்பி புதிதாக பிஸினஸ் அக்கவுண்ட் ஒன்றை ஓப்பன் செய்து பல தவணைகளாக 33 லட்சம் ரூபாயை செலுத்தியிருக்கிறார். செலுத்திய தொகையை இரட்டிப்பாக திரும்ப கேட்டபோது மழுப்பலான பதில்கள் வந்திருக்கிறது. ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோசடி பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "

குவாண்டம் ஏ.ஐ மோசடி எனப்படும் இந்த வகையான மோசடியில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோவை உருவாக்கிய மோசடி கும்பல், அந்த லிங்க் மூலம் இந்த நபரின் விவரங்களைப் பெற்றிருக்கிறார்கள். இரட்டிப்பு லாப ஆசை, டாலரில் முதலீடு, கிரிப்டோ கரன்சி, செபி, ரிசர்வ் வங்கி, முதலீட்டு வரி , பாதுகாப்பு வரி என ஏதேதோ பொய்களைச் சொல்லி மொத்தம் ரூ. 33,10,472 தொகையை வங்கி பரிவர்த்தனைகள் மூலம் பறித்துள்ளனர்.

Cyber Crime

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பேராசையால் பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள் " என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திருமணம் மீறிய உறவு; இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற நண்பர்கள்.. மது போதையில் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே வசிக்கும் சரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலை... மேலும் பார்க்க

மாணவிக்குப் பாலியல் தொல்லை? விசாரணைக்குப் பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்; என்ன நடந்தது?

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 23.4.2025-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக... மேலும் பார்க்க

`வங்கியில் ரூ.8 கோடி மோசடி' - மகாராஷ்டிரா அமைச்சர் மீது வழக்கு.. நடந்தது என்ன?

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் யார்?மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் தனது மகனுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்க... மேலும் பார்க்க

`இட்லி பார்சல், ரூ.8 கூடுதலாக வாங்கிய உணவகத்துக்கு ரூ.30,000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2022 -ம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க

சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த காந்தி - ராஜேஸ்வரி தம்பதியின் மூன்றரை வயது மகள் கோபிகா. கடந்த 30-11-2020 அன்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா திடீரெ... மேலும் பார்க்க

கரூர்: வழக்கறிஞரைத் தாக்கி பணம், நகைகள் கொள்ளை; சக வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது; என்ன நடந்தது?

கரூர், சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வழக்கறிஞரான இவர் தனது வீட்டிலிருந்தபோது இவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 3 நபர்கள் புகுந்துள்ளனர்.அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால், ஆறுமுக... மேலும் பார்க்க