செய்திகள் :

நிதி ஆயோக்: முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பும்… திமுக-வின் குற்றச்சாட்டுகளும்!

post image

நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியிருக்கிறது. அனைத்து மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகள் போன்றவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா

அதேபோல தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தை, புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா, ``ஒன்றியத்தில் பா.ஜ.க அரசு வந்த பிறகு திட்டக்குழுவை கலைத்துவிட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கியது.

மாநில வளர்ச்சி, திட்ட செயல்பாடுகள், மாநிலத்திற்கான நிதி ஆதாரங்கள் போன்றவைகளை விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பின்தங்கி இருக்கும் பல மாநிலங்கள், தங்களுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை நம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்திருப்பதன் நோக்கம் புரியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி

கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் பிரதமரிடம் நேரடியாக விளக்குவதற்கான இந்த வாய்ப்பை முதல்வர் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒரே கூட்டணியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமி, அந்த கூட்டணிக்கு தலைமையேற்கும் பிரதமரை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு நிதி கேட்காமல் புறக்கணித்தது ஏன் ?

`கட்சியின் கொள்கையே மாநில அந்தஸ்து பெறுவதுதான்’ என்று கூறி, அதற்காக இரண்டு முறை தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர், அந்தக் கோரிக்கையை இந்தக் கூட்டத்தில் நேரடியாக வைத்திருக்கலாமே ? தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பொதுவெளியில் புலம்பித் தீர்க்கும் முதல்வர் ரங்கசாமி, அதற்காக இந்தக் கூட்டத்தை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை ?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

மற்ற மாநிலங்களுக்கு 42% ஒன்றிய அரசின் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒன்றிய அரசின் 70% நிதியைப் பெற்றுக் கொண்டிருந்த புதுச்சேரிக்கு, தற்போது 25% கூட கிடைக்கவில்லை. இந்த அவலத்தை பிரதமரிடம் சுட்டிக் காட்டியிருக்கலாம்.

ஒன்றிய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 100% நிதியுதவியை மத்திய அரசு வழங்க கோரி இருக்கலாம். மேலும் புதுச்சேரியின் நீண்டகால கடனான ரூ.11.500 கோடியை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்திருக்கலாம். புதிய சட்டமன்ற புதிய கட்டடம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், மாநில வளர்ச்சி முடங்கி கிடப்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்கலாம்.

தமிழகத்தில் அடிப்படை தேவையான கல்விக்கான நிதியை கூட ஒதுக்காத ஒன்றிய அரசு மீது சட்டப் போர் நடத்தி வரும் எங்கள் தளபதி ஸ்டாலின் அவர்கள் கூட இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. இப்படியான சூழலில் நம் முதல்வர் புறக்கணிப்பது ஏன் என்பது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!

கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு... மேலும் பார்க்க

’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாண்லே நஷ்டத்தில் இயங்குகிறது… பாதி ஊழியர்களை காணவில்லை’ – அப்செட்டான முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி குருமாம்பேட்டில் இயங்கி வரும் அரசின் பாண்லே நிறுவனத்தில், 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க

Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' - மிரட்டும் ட்ரம்ப்

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கி... மேலும் பார்க்க

'விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு' - பிரேமலதாவின் கணக்கு என்ன?

தே.மு.தி.க மீது மாறி, மாறி கூட்டணி பேரம் பேசும் கட்சி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார், பிரேமலதா. தே.மு.தி.க தலைவர... மேலும் பார்க்க

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சரா... மேலும் பார்க்க