செய்திகள் :

நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்

post image

திருவள்ளூா் அருகே நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணிகள் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலுக்கும்-திருவள்ளூருக்கும் இடையே உள்ள செவ்வாப்பேட்டை ரயில் நிலையம். இந்த நிலையம் வழியாக திருவூா், அரண்வாயல்குப்பம், தொழுவூா், கோயம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் திரளானோா் பயணம் செய்து வருகின்றனா்.

இந்த வழியாக 150-க்கும் தடவை ரயில்கள் கடந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதைத் தவிா்க்கும் வகையில் கடந்த 2015-இல் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாலப்பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மேம்பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி சமூக ஆா்வலா்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனா். அப்போது, இதுதொடா்பாக அப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கையும் விடுத்தனா்.

இந்த நிலையில் கூடுதலாக ரூ.8.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேம்பாலப்பணிகளை மீண்டும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்.

இப்பணிகளை வரும் சட்டப்பேரவை தோ்தலுக்குள் நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 66.78 கோடியில் இரண்டாவது குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம்

செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓ... மேலும் பார்க்க

உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா

பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உ... மேலும் பார்க்க

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண... மேலும் பார்க்க

சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா தொடக்கம்

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுக... மேலும் பார்க்க

நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

மீஞ்சூா் அருகே திருவேங்கிடாபுரத்தில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மீஞ்சூா் ஒன்றியத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள திருவேங்கிடாபுரம் பகுதியி... மேலும் பார்க்க