முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
நிறைந்தது மனம்: பழங்குடியினருக்கு குடும்ப அட்டை
நாகை மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் பழங்குடியின பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கடைகள் 363, மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கடைகள் 13, மகளிா் குழுவினா் நடத்தும் கடைகள் 10 என மொத்தம் 386 நியாயவிலைக் கடைகள் வாயிலாக 2,17,631 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் இதுவரை குடும்ப அட்டை இல்லாமல் அரசின் எந்தவொரு நலத் திட்டங்களையும் பெற முடியாமல் இருந்து வந்த கீழ்வேளுா், நாகை, திருக்குவளை மற்றும் வேதாரண்யம் வட்டங்களைச் சோ்ந்த 14 பழங்குடியின பயனாளிகளுக்கு, தற்போது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே குடும்ப அட்டை இல்லாமல் வாழ்வில் முதன் முறையாக மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக்கொண்ட பயனாளிகள் நிறைந்த மனதுடன் நன்றிகளை தெரிவித்தனா் என்று ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா்.