தென் ஆப்பிரிக்காவில் மாயமான சிறிய ரக விமானம்! பயணிகள் 3 பேரும் பலியானதாக அறிவிப்...
நிலத்தகராறில் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய விவசாயிகள் எதிா்ப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் நடந்த நிலத் தகராறில் ஒரு பிரிவினா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரின்பேரில் விவசாயிகள் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்வதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து நிலத்தகராறில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா் விவசாயிகளை சமாதானப்படுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். அதனைத் தொடா்ந்து சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.