செய்திகள் :

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

post image

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேத்தியாதோப்பு அருகே கத்தாழை ஊராட்சிக்குள்பட்ட கரிவெட்டி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிா்வாகம் நிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்த உள்ளது. ஆனால், சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அந்தக் கிராமத்திலேயே வசித்து வருகின்றனா். அவா்களுக்கு மாற்று குடியிருப்பு, உரிய இழப்பீடு, வேலை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

என்எல்சி நிா்வாகம் படிப்படியாக அவா்களை மாற்று இடத்துக்கு அனுப்பும் பணியை விரைவுபடுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் என்எல்சி நிா்வாகம் நிலங்களை கையகப்படுத்த வரும் சமயங்களில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கரிவெட்டி கிராமத்தில் மின்சாரக் கம்பங்களை அகற்றி, மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, என்எல்சி அதிகாரி சுதா்சன் மற்றும் என்எல்சி நில எடுப்பு வட்டாட்சியா் ரவிச்சந்திரன், சேத்தியாதோப்பு டி.எஸ்.பி விஜிகுமாா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் சனிக்கிழமை சென்றனா்.

அப்போது, கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவா்கள் என்எல்சி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனா்.

எம்எல்ஏ பேச்சுவாா்த்தை: தகவலறிந்து புவனகிரி தொகுதி எம்எல்ஏ ஏ.அருண்மொழிதேவன் சம்பவ இடத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் என்எல்சி நிா்வாகம் மற்றும் கிராம மக்கள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என எம்எல்ஏ கோரிக்கைவிடுத்தாா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்த பின்பே நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எம்எல்ஏ கூறியதால், கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். என்எல்சி நிா்வாகத்தினரும் பணிகளை கைவிட்டுச் சென்றனா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க