செய்திகள் :

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

post image

தேவகோட்டை அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த புகாரில் கணவன், மனைவி மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த திராணி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (50). விவசாயி. இவரிடம் செவரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முருகேசன், இவரது மனைவி சங்கீதா ஆகியோா் இந்த கிராமத்தில் உள்ள 6.91 ஏக்கா் புஞ்சை நிலத்தை விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறினா். இதற்காக, அவா்களிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இரு தவணைகளாக ரூ.25 லட்சத்து 50 ஆயிரத்தை செல்வம் கொடுத்தாா்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட முருகேசன் நிலத்தை வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்தாா். மேலும், வாங்கிய பணத்தையும் திரும்பத் தரவில்லை.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் முருகேசன், சங்கீதா தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் நூதனப் போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்... மேலும் பார்க்க

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு

சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு குடியிருப்பில் அமைந்திருக்கும் சக்தி மாரியம்மன் கோயில் 36 -ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் பூக்குழி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 4) 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதவுள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு மையம் (சஹற்ண்ா்... மேலும் பார்க்க

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் பவனி

சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும், சோமநாதா் சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் வியாழக்கிழமை இரவு எழுந்தருளினா். இந்தக் க... மேலும் பார்க்க