Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
நில உடைமைகளை பதிவு செய்ய தோட்டக்கலை விவசாயிகளுக்கு அழைப்பு!
பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், பயன்பெறும் தோட்டக்கலை விவசாயிகள் நில உடைமை பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, திண்டுக்கல் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், ஏற்படும் கால தாமதத்தை தவிா்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் உரிய நேரத்தில் பெறும் வகையில், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் பதிவு விவரங்களோடு, ஆதாா் எண், கைப்பேசி எண், நில விவரங்கள் உள்ளிட்டவற்றை இணைக்கும் பணி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரியின் கெளரவ நிதி உதவித் தொகை பெறும் விவசாயிகள், நில உடைமை விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா், உதவி தோட்டக் கலை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.