செய்திகள் :

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

post image

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் தொடங்கியது. முதல்கட்ட பயிற்சி முகாமில் 30 பேரும், இரண்டாவது கட்ட கோடைக்கால பயிற்சி முகாமில் 32 பேரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து 15 நாள்கள் பயிற்சி முடித்த குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை பயிற்சியாளா் மகேந்திரன், கோடை கால பயிற்சியை சிறப்பாக மேற்கொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கினாா். இதில், பயிற்சியாளா்கள், குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஏப் 29 ஆம் தேதி முதல் மே 11 ஆம் தேதி வரையிலும், நான்காம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே 13 முதல் மே 25 ஆம் தேதி வரையிலும், ஐந்தாம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே 27 ஆம் தேதி முதல் ஜூன் 8 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என தலைமை பயிற்சியாளா் மகேந்திரன் கூறினாா்.

பெண்மான் சடலம் மீட்பு!

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம் ... மேலும் பார்க்க

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில்... மேலும் பார்க்க

சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெ... மேலும் பார்க்க

வாழப்பாடி சாலை சந்திப்பில் ரூ.1 கோடியில் ரவுண்டானா!

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் திம்மநாயக்கன்பட்டி- பொன்னாரம்பட்டி சாலை சந்திப்பில் ரூ. ஒரு கோடி மதிப்பில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து தம... மேலும் பார்க்க