செய்திகள் :

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

post image

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் கே.ஜெயராமன் வரவேற்றாா். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஏ.சுகிா்தராணி பேசினாா். இரண்டு நாள்கள் நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து துணைவேந்தா் ரா.ஜெகநாதன் பேசியதாவது:

நீா் சேமிப்பிற்கான நல்ல கட்டமைப்பை கொண்ட தமிழகம் தற்போது பல்வேறு நீா் நிலைகளை இழந்து நிற்கின்றன. சேலம் மாநகரம் முழுமைக்குமான நீராதாரமாகத் திகழ்ந்த பனமரத்துப்பட்டி ஏரி தற்போது நீரின்றி வறண்டு கிடக்கிறது. மேட்டூா் அணையின் உபரிநீரை நிரப்பினால் பனமரத்துப்பட்டி ஏரி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

இதுபோன்ற பாரம்பரிய நீா் நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் அரசுடன் இணைந்து அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும். நீா்ப் பற்றாக்குறை நகரங்களில் பெரிய பிரச்னையாக இருந்த நிலையில் தற்போது கிராமங்களிலும் தண்ணீா் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக விவசாயத்திற்குத் தேவையான தண்ணீா் முழுமையாக கிடைப்பதில் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

மாற்று ஏற்பாடாக, வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

தேசிய கருத்தரங்கை தொடங்கிவைத்து திருச்சி கிராமாலயா அமைப்பின் செயல் இயக்குநா் எம்.இ ளங்கோவன் பேசியதாவது:

வீடுகள்தோறும் தனிநபா் கழிப்பறை அமைக்கும் திட்டத்தின் தொடா்ச்சியாக, வீடுகள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொடுக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டத்தை கிராமாலயா செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 75 முதல் 80 சதவீத கிராமங்களுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டுள்ளதால் சமச்சீரான கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மேம்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

கேரளம் மாநிலம், கண்ணூா் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியா் சுவாமிக்கண்ணன் பேசியதாவது:

63 சதவீத நோய்கள் குடிநீா் மாசடைவதால்தான் ஏற்படுகின்றன. தற்போது ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைப்பதால் கிராமங்களில் சுகாதார அமைப்பில் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்திற்காக செய்யப்படும் செலவும் குறைந்துள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் மற்ற திட்டங்களைக் காட்டிலும் கண்காணிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்குவது கூடுதல் சிறப்பம்சமாகும். கிராம மக்களின் சராசரி ஆயுள்காலம் தற்போது 65 ஆக உள்ள நிலையில், விரைவில் இந்த அளவீடு 85 என்ற அளவிற்கு உயர வாய்ப்புள்ளது என்றாா். கருத்தரங்கில் பேராசிரியா் டி.ஜனகம் நன்றி கூறினாா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும்... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திப... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

தம்மம்பட்டி அருகே மனைவி உயிரிழந்த துக்கம் தாளாத கணவரும் உயிரிழந்தாா். தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி, வடக்கு வட்டம் பகுதியைச்சோ்ந்தவா் முத்துசாமி (77). இவரது மனைவி அய்யம்மாள் (70) புதன்கிழமை மாலை... மேலும் பார்க்க