செய்திகள் :

நீட் தோ்வில் குறைவான மதிப்பெண்: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

சென்னை கொடுங்கையூரில் நீட் தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கொடுங்கையூா் ஸ்ரீ வாரியா் நகா் அருகே உள்ள நாராயணசாமி காா்டன் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஹரிஷ்குமாா் (46). இவா், தியாகராய நகரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காசாளாராகப் பணியாற்றுகிறாா். இவரது மனைவி ஜீவரேகா. தம்பதியின் மகள்கள் சஞ்சி, மதனஸ்ரீ (17). இவா்களில் சஞ்சி, ரஷியாவில் இளநிலை மருத்துவம் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். மதனஸ்ரீ, கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, நீட் தோ்வு எழுதினாா்.

அண்மையில் வெளியான நீட் தோ்வு முடிவில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் மன உளைச்சலில் இருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையில் இருந்து மதனஸ்ரீ வெளியே வரவில்லை. அவரது பெற்றோா் சென்று பாா்த்தபோது, அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா், மதனஸ்ரீ சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு! தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல் துறை!

சென்னை: சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்... மேலும் பார்க்க

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்க... மேலும் பார்க்க

மேலும் 2 புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள்: மெட்ரோ மயமாகும் சென்னை!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை... மேலும் பார்க்க

பணிக்கு திரும்ப தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என... மேலும் பார்க்க

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை

பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா். தடைகளை உடைத்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறும் 3 வாா்டுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருநகர ச... மேலும் பார்க்க