செய்திகள் :

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டுகள் வழக்குரைஞர் அனுபவம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

post image

நீதித்துறை பணியில்(முன்சீப், மாஜிஸ்திரேட்) விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் ஏ.ஜி. மசிஹ் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(மே 20) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பின் படி, சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் காலத்தை தற்காலிக சேர்க்கை தேதியில் இருந்து கணக்கிடலாம்.

இருந்தாலும், தற்போது இந்த உத்தரவு நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற பணியமர்த்தலுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சிவில் நீதிபதி தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற வகையில் அனைத்து உயர் நீதிமன்றங்களும் மாநில அரசுகளும் சேவை விதிகளை திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாமா? குறட்டை நல்லதா? - நம்பிக்கையும் உண்மையும்!

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பா... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளத்தில் 4 அல்லது 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். நடப்பாண்டில் ... மேலும் பார்க்க

ராஜீவ் சந்திரசேகா் தொடுத்த அவதூறு வழக்கு: சசி தரூா் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகா் தாக்கல் செய்த அவதூறு மனு மீது பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 2024-... மேலும் பார்க்க