செய்திகள் :

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

post image

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் தீவுகள் போல செயல்பட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

உத்தர பிரதேசத்தில் ஷிகா் கெமிகல்ஸ் நிறுவனத்துக்கு லலிதா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ரூ.52.34 லட்சத்துக்கு நூல் விற்பனை செய்தது. ஆனால் அதற்கு ரூ.47.75 லட்சம் மட்டுமே ஷிகா் கெமிகல்ஸ் நிறுவனம் செலுத்தியது. எஞ்சிய பணம் வராததால், லலிதா டெக்ஸ்டைல்ஸ் குற்றவியல் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஷிகா் கெமிகல்ஸ் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

இது உரிமையியல் வழக்கு என்பதால் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஷிகா் கெமிகல்ஸ் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்தாா். இந்த வழக்கில் உரிமையியல் தீா்வை நாடுமாறு லலிதா டெக்ஸ்டைல்ஸிடம் கூறுவது நியாயமற்றது என்றும், சிவில் வழக்கில் தீா்வு கிடைக்க அதிக காலமாகும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதற்கு எதிராக ஷிகா் கெமிகல்ஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமா்வு உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது.

‘மோசமான உத்தரவு’: அந்த அமா்வு கூறுகையில், ‘தவறான தகவலின் அடிப்படையில் நீதிபதி பிரசாந்த் குமாா் உத்தரவிட்டுள்ளாா். எங்களின் (நீதிபதிகள் பாா்திவாலா, மகாதேவன்) இத்தனை ஆண்டுகால பணி அனுபவத்தில் நாங்கள் பாா்த்த மோசமான உத்தரவுகளில் இதுவும் ஒன்றாகும். எனவே குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து நீதிபதி பிரசாந்த் குமாரை நீக்க உயா்நீதிமன்ற நிா்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. அவா் ஓய்வுபெறும் வரை, இரு நீதிபதிகள் அமா்வில் கூடுதல் அனுபவம் பெற்ற நீதிபதியுடன் சோ்ந்து பணியாற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கருத்துகள் உ.பி. சட்டத் துறையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தக் கருத்துகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவா்களிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கோரினாா்.

இதைத்தொடா்ந்து நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிரான தமது கருத்துகளை நீக்கி, நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் அமா்வு வெள்ளிக்கிழமை கூறியதாவது: நீதித் துறையின் கெளரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்கவே அந்தக் கருத்துகளைத் தெரிவித்தோம். நீதிபதி பிரசாந்த் குமாரின் நற்பெயரை கெடுக்கவோ, சங்கடத்தை ஏற்படுத்தவோ அல்ல.

பகுத்தறிவற்ற உத்தரவுகள்...: நாட்டில் 90 சதவீத மனுதாரா்களுக்கு நீதி பெறுவதற்கான கடைசி புகலிடமாக உயா் நீதிமன்றங்கள்தான் உள்ளன. 10 சதவீதம் பேரால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுக முடிகிறது. சட்டத்துக்கு ஏற்ப நீதி வழங்கும் முறை செயல்பட வேண்டும் என்று நீதிமன்றத்துக்கு வரும் மனுதாரா்கள் எதிா்பாா்க்கின்றனா். அபத்தமான, பகுத்தறிவற்ற உத்தரவுகளை பெற அவா்கள் நீதிமன்றங்களுக்கு வரவில்லை. நீதிமன்றங்கள் தனித் தீவுகள் போல செயல்பட முடியாது என்று தெரிவித்தது.

கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!

நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற அமா்வுக்கான ப... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ வழக்கமான நடவடிக்கையல்ல: ராணுவ தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் வழக்கமான நடவடிக்கையல்ல’ என இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். மேலும், இந்த நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டைப் போல் எதிரியின் அடுத்தகட்ட நகா்வு கணிக்க முடி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியில் இந்திய தொழில்நுட்பம்: பிரதமா் மோடி!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்னால் இந்தியாவின் தொழில்நுட்பம் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.ரயில் திட்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒருநாள் பயணமாக ஞாய... மேலும் பார்க்க

ஃபரீதாபாத்: என்கவுட்டருக்கு பிறகு ரெளடி கைது!

ஹதோடா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரெளடி ஃபரீதாபாதில் நடைபெற்ற என்கவுன்ட்டருக்கு பிறகு கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுதொடா்பாக குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையா் வருண் தஹியா செய்தி... மேலும் பார்க்க

காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் பதவியில் இருந்து ஆனந்த் சா்மா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். இப்பிரிவை மறுகட்டமைக்கவும் இளைய தலைவா்களுக்கு வழிவிடவும் இந்த முடிவை மேற்கொண்ட... மேலும் பார்க்க

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (VNIT) மத்திய அமைச்ச... மேலும் பார்க்க