செய்திகள் :

நீதிமன்ற ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

திருவாரூா் அருகே தகராறை விலக்க முயன்றபோது கத்திக்குத்தில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). கூத்தாநல்லூரை பூா்வீகமாகக் கொண்ட இவா், புலிவலம் பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்மைக்காலமாக முகமுது ஆதாமுடன் பேசுவதை அந்தப் பெண் தவிா்த்த காரணத்தால், தனது உறவினா்கள் இருவருடன் முகமது ஆதாம் அந்த பெண்ணின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது அப்பெண்ணின் சகோதரருக்கும் முகமது ஆதாமுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறை விலக்க முயன்ற அந்தப் பகுதியில் வசித்து வந்த நீதிமன்ற ஊழியா் சந்தோஷ்குமாா் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக முகமது ரசூல்தீன் (21), ஹாஜி முகமது (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். முகமது ஆதாமை, தனிப்படை போலீஸாா் தேடி வந்த நிலையில், புதன்கிழமை திருநெல்வேலி அருகே அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க