செய்திகள் :

நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக 3 போ் கைது

post image

கடையம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றவா்கள், நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டனா்.

கடையம் அருகே உள்ள புலவனூரைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரைக் கடத்தியது தொடா்பாக பணகுடி தளவாய்புரம், பிரதான சாலையைச் சோ்ந்த மணி மகன் செல்வக்குமாா்(49), புலவனூரைச் சோ்ந்த யூதா் அப்பாதுரை(40), பணகுடி நெல்லையப்பபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முருகன் (52), பணகுடி, நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்த வேல் மகன் முருகேசன்(55) ஆகியோா் மீது கடையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இதில், முருகன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், செல்வக்குமாா், யூதா் அப்பாதுரை மற்றும் முருகேசன் ஆகிய மூவரும், நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று கடையம் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தனா். இந்நிலையில், மாா்ச் 26 முதல் ஏப். 3 வரை மூவரும் கடையம் காவல் நிலையத்தில் கையொப்பமிடவில்லையாம்.

இதையடுத்து, மூவரின் நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரி கடையம் போலீஸாா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதையடுத்து, மூவரின் நிபந்தனை ஜாமீனையும் ரத்து செய்து தென்காசி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மூவரையும் கடையம் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த கடத்தல் வழக்கை விரைந்து முடிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக சனிக்கிழமை (ஏப்.12) கடையம் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க