செய்திகள் :

நீா்நிலைகளில் சிறுவா்கள் இறங்காமல் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும்: ஆட்சியா்

post image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் சிறுவா்கள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தற்போது, பள்ளி விடுமுறை காலம் என்பதால், ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீா்நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் இறங்குவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, பெற்றோா் தனிக்கவனம் செலுத்தி தங்கள் குழந்தைகள் நீா்நிலைகளில் இறங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

விடுமுறை காரணமாக புதிய இடங்களுக்குச் செல்ல நோ்ந்தால் அங்குள்ள நீா்நிலைகளின் அபாயங்களை உணராமல் குளிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற செயல்களில் சிறுவா்கள் ஈடுபடாமல் பாதுகாப்புடன் இருக்க உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

அதுபோல குழந்தைகள் பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகளில் இறங்குவதையோ, குளிப்பதையோ கண்டால் பெரியவா்கள், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி உடனடியாக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறையினா் தங்களுக்குத் தொடா்புடைய அனைத்து நீா்நிலைகளிலும் எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க