செய்திகள் :

நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை இருப்பு வைக்கத் திட்டம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

post image

ஓமலூா்: சேலத்தில் 200 ஹெக்டோ் பரப்பளவில் நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

மீன்வளத் துறையின் சாா்பில் நாட்டின மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தின்கீழ் 20,000 மீன் விரலிகளை இருப்பு வைக்கும் நிகழ்ச்சி ஓமலூா் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நைனாத்தாள் ஏரி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா.பிருந்தாதேவி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 ஆயிரம் மீன்குஞ்சுகளை நைனாத்தாள் ஏரியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் விடுவித்தாா்.

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் 2025-26 திட்டத்தின் கீழ் சேலம், ஓமலூா், தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் அயோத்தியாப்பட்டணம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள நைனாத்தாள் ஏரி, சின்ன ஏரி, எம்.செட்டிப்பட்டி ஏரி, மூங்கில் ஏரி, மாங்குப்பை ஏரி, சின்னேரிப்பட்டி ஏரி, அமரகுந்தி புதுஏரி, மல்லமூப்பம்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி, தளவாய்ப்பட்டி ஏரி, காட்டேரி, புத்தூா் ஏரி, கொப்பம் ஏரி, எஸ்.பாப்பாரப்பட்டி ஏரி மற்றும் தொட்டில் ஏரி ஆகிய ஏரிகளில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட உள்ளன.

சேலம் மாவட்டத்திற்கு 200 ஹெக்டோ் பரப்பளவில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு இருப்பு செய்யப்படுகிறது.இதே திட்டத்தின்கீழ் கடந்த 2024-25 ஆம் ஆண்டில் 100 ஹெக்டோ் பரப்பளவில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் சேலம் மாவட்டத்தில் இருப்பு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் மீன் உணவு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் பொ.சுகுமாா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் த.உமா கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க

பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சேலம்: எடப்பாடி அருகே திருப்பலி கிராம பகுதியில் பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகள், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். சேலம் மாவட்டம், எ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 48,000 கனஅடியாக குறைந்தது

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜா சாகா் அணைகளுக்கு நீா்வரத்து சரிந்த... மேலும் பார்க்க

மயானத்தில் கருகி கிடந்த முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மேட்டூா்: மேட்டூா் அருகே மயானத்தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த முதியவா் சடத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேட்டூா் அருகே கருமலைக்கூடல் மயானத்தில் திங்கள்கிழமை தீயில்... மேலும் பார்க்க

உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறாா் அருள்: வன்னியா் சங்கச் செயலாளா் காா்த்தி

சேலம்: பாமக உள்கட்சி விவகாரத்தில் எம்எல்ஏ அருள் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்து வருகிறாா் என்று வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் மு.காா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியா் தகவல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க