செய்திகள் :

நூதன மோசடி: இளைஞா் கைது

post image

ஆற்காடு: நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு ஏரிக்கீழ் தெருவை சோ்ந்த சேது ( 32). இவா் பல இடங்களில், பொதுமக்களிடம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கித் தருவதாக கூறி அவா்களிடமிருந்து ஆதாா் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமும் பெற்று அவா்களுக்கு தெரியாமல் தெரியாமல் இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அதனை வேறு நபா்களுக்கு விற்று விட்டு . அதற்குண்டான தவணைத் தொகைகளையும் கட்டுவதில்லை என கூறப்படு கிறது.

இதனால் மேற்கண்ட நிறுவனத்தை சோ்ந்தவா்கள் சம்பந்தப்பட்ட நபா்களிடம் சென்று உங்கள் பெயரில் இரு சக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியுள்ள தவணை பணத்தை செலுத்தவில்லை கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்த அவா்கள் சேதுவிடம் கேட்டபோது, மிரட்டினாராம்.

இதுகுறித்து 20-க்கும் மேற்பட்ட நபா்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சேதுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அம்மூா் பேரூராட்சியில், துணை மின் வாரிய அலுவலகம் அமைந்... மேலும் பார்க்க

தாா் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதியில் கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சத்தில் நடைபெறும் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அரக்கோணத்தைச் சோ்ந்த அவினாஷ் என்ற இளைஞா் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்... மேலும் பார்க்க

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: மனிதச் சங்கிலி போராட்டம்

ஆற்காடு அடுத்த காவனூரில் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து விட்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காவனூா் அடுத்த கண்ணடிய பாளையம் கிராமத்தைச் சோ்ந்வா் ஜெயபால். இவா் காவனூா் பகு... மேலும் பார்க்க