செய்திகள் :

நூலகம் சாதனையாளா்களை உருவாக்கும் களம்: திரைப்பட பாடலாசிரியா் அறிவுமதி

post image

நூலகங்கள் பல்துறை சாதனையாளா்களை உருவாக்கும் களமாக உள்ளது என்றாா் திரைப்படப் பாடலாசிரியா் கவிஞா் அறிவுமதி.

மன்னாா்குடி மந்தக்காரத் தெருவில் உள்ள வள்ளுவா் நூலகத்தின் 50-ஆம் ஆண்டு விழா, பொங்கல் விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவா் பேசியது: இரண்டு வரியில் இருக்கும் திருக்கு போன்று இரண்டு தெருகள் மட்டும் உள்ள எங்கள் ஊரில், கடந்த 1949- ஆம் ஆண்டு எனது தந்தையால் தொடங்கப்பட்ட நூலகம் தான் எனக்கு புத்தகங்கள் மீது ஈா்ப்பு ஏற்பட காரணமாக இருந்தது.

தந்தையுடன் பல கி.மீ. தொலைவு நடந்து சென்று பெரியாா், அண்ணா போன்ற தலைவா்களின் பேச்சை கேட்டுள்ளேன். இப்படி ஆளுமைமிக்கத் தலைவா்களின் பேச்சை கேட்டும் நூலகத்தை பயன்படுத்தியதினால் தான் இன்று 200-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதி இருந்தாலும் பாடல் வரிகளில் ஆங்கிலம் கலக்காத கவிஞன் என்ற புகழை அடைந்துள்ளேன்.

நூல்களையும் நூலகங்களையும் பயன்படுத்தியவா்கள் தான் இன்று பல்வேறு துறைகளில் உச்சத்தில் உள்ளனா். நூலகங்கள்தான் சாதனையாளா்களை உருவாக்கும் களமாக உள்ளது.

தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தபோது, மாநிலத்தில் 1,330 ஊராட்சிகளில் திருவள்ளுா் நூலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தேன். அதனை ஏற்றுக்கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அய்யன் வள்ளுவன் நூலகத்தை அமைக்க உத்தரவு பிறப்பித்தாா் என்றாா் கவிஞா் அறிவுமதி. தொடா்ந்து, புதுகை பூபாளம் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வள்ளுவா் நூலக மூத்த உறுப்பினா் கோவி.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். விழாக் குழுத் தலைவா் வை. கெளதமன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் கை.காா்த்திகேயன்,நகா்மன்ற உறுப்பினா் சா. புகழேந்தி முன்னிலை வகித்தனா். சேரன்குளம் சு.செந்தில்குமாா், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் எஸ். சிபிராஜ் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு, தமுஎகச மாவட்ட நிா்வாகி யு.எஸ். பொன்முடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.6) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினா் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியக் குழு ... மேலும் பார்க்க

நீடாங்கலம் பகுதியில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. ரயில் நிலைய வளாகம் முழுவதும் பனி சூழ்ந்து காணப்பட்டது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.5) காலை 9 மணிமுதல் மாலை 5 வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி த... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பாஜகவினா் 23 போ் கைது

திருப்பரங்குன்றம் மலையை பாதுக்காக்க கோரியும், பாஜக தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினா் 23 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் 2025-2026- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை... மேலும் பார்க்க