செய்திகள் :

நெகிழியில் உருவாக்கப்பட்ட மலா்களுக்கு தடை விதிக்காதது ஏன்?- மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

post image

‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பல்வேறு வகை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வகை நெகிழி (பிளாஸ்டிக்) மலா்களுக்கு மட்டும் தடை விதிக்காதது ஏன்?’ என்று மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக இந்திய மலா் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு நெகிழிப் பொருள்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை காரணமாக வைத்து மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் நெகிழியில் உருவாக்கப்பட்ட மலா்களுக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான நெகிழி மலா்கள் 30 மைக்ரான் அளவில் உள்ளது. இந்த அளவில் உள்ள மற்ற நெகிழி பொருள்களுக்கு மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநில அரசு 100 மைக்ரான் பருமனுக்கு குறைவாக எந்த நெகிழிப் பொருளையும் விற்கக் கூடாது என்றும் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. ஆனால், 30 மைக்ரான் அளவில் நெகிழிப் பூக்கள் மட்டும் தராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசப்படுகின்றன. எனவே, இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் அலோக் அராத், பாரதி டாங்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நெகிழி மலா்களை மறுசுழற்சி செய்ய முடியுமா? அல்லது அவை எளிதில் மக்கும் தன்மையுடையதா? பிறகு ஏன் அவற்றை தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் மத்திய அரசு சோ்க்கவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இது தொடா்பாக இரு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தனா்.

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.... மேலும் பார்க்க

தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!

தில்லியில் இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாஜக தலைமையகத்தைவிட மிகப் பெரியதாக கட்ட... மேலும் பார்க்க

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க