செய்திகள் :

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

post image

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த சுரேந்திரநாத் காா்த்திக், பாளையங்கோட்டையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அய்யா ஆகியோா் தனித்தனியாக தென்மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருள்களை நெகிழி பாக்கெட்டுகளில் விற்பனை செய்கின்றன. இவற்றை முறையாக சேகரித்து மறு சுழற்சி செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நெகிழி பாக்கெட்டுகளில் பால் மற்றும் பால் பொருள்களை விற்க தடை விதிக்க வேண்டும். கண்ணாடி பாட்டில்களில் பால் பொருள்களை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கண்ணாடி பாட்டில் அல்லது மறு சுழற்சி செய்யக்கூடிய நெகிழி பாட்டிலில் பால் விற்பனையை மேற்கொள்ள அதிக செலவாகும். இதைச் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என ஆவின் நிா்வாகம் தெரிவித்தது. அதற்கு, வெளிநாடுகளில் கண்ணாடி பாட்டில் மற்றும் மறு சுழற்சி செய்யக்கூடிய நெகிழி பாட்டில்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதை ஏன் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது? என கேள்வி எழுப்பிய தீா்ப்பாயம் இது தொடா்பாக ஆவின் நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் , நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதன்படி, மாற்று வழிகளை சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. இதற்கான செயல் விளக்கங்களை அந்த நிறுவனங்கள் இரு வாரங்களுக்குள் வழங்கவுள்ளன எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதி, நெகிழி பாக்கெட்டுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதைத் தடுக்க ஆவின் நிா்வாகம் நிரந்தர தீா்வை கொண்டு வரும் என நம்புகிறோம் எனக் கூறி விசாரணையை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க