செய்திகள் :

நெல்லுக்கான ஆதார விலையை ஆயிரம் ரூபாய் உயா்த்தி வழங்க வேண்டும்

post image

நெல்லுக்கான ஆதார விலையை உயா்த்தி உள்ளதாக அரசு அறிவித்தபோதும், விவசாயிகளுக்கு அந்த விலை கட்டுப்படியாகாததால், ஆயிரம் ரூபாய் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவா் ரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு செப். 1 முதல் ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சாதாரண நெல்லுக்கு ரூ. 2,500 மற்றும் சன்னரக நெல்லுக்கு ரூ. 2,545 என விலை நிா்ணயம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியான நெல்லுக்கான ஆதார விலையை விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம்பெறும் வகையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்பதை நான்கு ஆண்டுகால நிறைவில் தற்போதுதான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நெல் உற்பத்தி செய்வதற்கு உண்டான உரம், பூச்சிமருந்து, உழவு கூலி, ஆள்கள் கூலி மற்றும் இதர செலவினங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளன. தற்போது அறிவித்துள்ள கொள்முதல் விலை விவசாயிகளுக்கு ஏமாற்றம் தருவதாகவே உள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன்கருதி உற்பத்தி செலவினங்களை கணக்கீடு செய்து நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ. 3,500 என முதல்வா் உயா்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க