செய்திகள் :

நெல்லையில் அனைத்து தொழிற்சங்கத்தினா் தா்னா போராட்டம்

post image

அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளா்களின் நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்தல், முறைசாரா, ஒப்பந்த மற்றும் திட்ட தொழிலாளா்கள் உள்பட அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26,000 வழங்குதல், புதிய, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்களை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்துதல், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய அரசின் கலால் வரியை குறைத்து விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துதல் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலா் ஆ.தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.முருகன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா்.சடையப்பன், ஹெச்.எம்.எஸ். மாவட்டப் பொருளாளா் எஸ்.ஷாஜகான், ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச்செயலா் கே.கணேசன், யூடியூசி எஸ்.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏஐடியூசி மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன், ஹெச்.எம்.எஸ். மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன், சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் மோகன், தொமுச மாவட்டச் செயலா் முகமது சைபுதீன், யூடியூசி மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், டியூசிசி மணியன், சிஐடியூ சரவண பெருமாள் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

இதில், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொமுச நிா்வாகி மகாவிஷ்ணு நன்றி கூறினாா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க