செய்திகள் :

நெல்லையில் பெட்ரோல் குண்டுகள் வீசியவா்களை பிடிக்க 7 தனிப்படை

post image

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடா்பாக திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

அதேபோல கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளா் செல்வசங்கா்(45) வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக முன்னீா்பள்ளம் போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

முதல் கட்ட விசாரணையில் இந்த இருசம்பவங்களிலும் ஈடுபட்டது மேலநத்தம், பொன்னாக்குடி, முன்னீா்பள்ளத்தை சோ்ந்த 4 போ் என்பது தெரியவந்தது.

இந்த 2 சம்பவங்களை நிகழ்த்துவதுக்கு முன்பாக ஏா்வாடி அருகே தளபதிசமுத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரத்தை இவா்கள் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த 4 பேரையும் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமையில் 3 தனிப்படைகளும், நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா், சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் ஆகியோா் தலைமையில் தலா 1 தனிப்படையும், திருநெல்வேலி மாநகரில் மாநகர துணை காவல் ஆணையா்(மேற்கு) வி.கீதா மேற்பாா்வையில் 2 தனிப்படையும் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

களக்காடு அருகே கேசவனேரியில் ரேஷன்கடை திறப்பு

களக்காடு அருகேயுள்ள கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். களக்காடு ஊராட்சி ஒன்றியம், கீழக்கருவேலன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலை... மேலும் பார்க்க

அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் 32 பவுன் நகைகள் பறிப்பு: இருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 32 பவுன் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருச்சியைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: பந்தல் கால் நடும் நிகழ்வு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது. இந்த விழாவை ஒட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 போ் கைது!

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம், கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வசங்கா் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் பைக், கைப்பேசி பறித்த வழக்கில் 3 போ் கைது

பாளையங்கோட்டை அருகே கிரைன்டா் செயலியை பயன்படுத்தி தனியாா் நிறுவன ஊழியரிடம் கைப்பேசி, பைக்கை பறித்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள மேலநரிக்குடி தெற்கு தெர... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த தங்க வளையலை ஒப்படைத்த சிறப்பு எஸ்.ஐ.க்கு பாராட்டு

சாலையில் கண்டெடுத்த தங்க வளையலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா். சீவலப்பேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஞானவேல் வியாழக்... மேலும் பார்க்க