செய்திகள் :

நெல்லை: அமித் ஷா வருகை; ஆதரவு, எதிர்ப்பு, பரபரப்பு... நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்து

post image

நெல்லைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க-வினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தி.மு.க சார்பாக நகரம் முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பா.ஜ.க-வினர் கோபமடைந்தனர்.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையாற்றி வருகிறார்.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் களப்பணிகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி பாரதிய ஜனதா கட்சி சார்பாக நெல்லையில் இன்று பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார். கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இறங்குகிறார்.

பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு
பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு

அங்கிருந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்குச் செல்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்தில் அமித் ஷா கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடக்கும் இடத்துக்குச் செல்கிறார்.

வரவேற்பும்.. எதிர்ப்பும்..!

நெல்லைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்று சாலையின் இருபுறமும் கட்சிக் கொடிகள் நடப்பட்டுள்ளன. அத்துடன் அமித்ஷாவை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பிளக்ஸ் பேனர்களையும் சாலையோரங்களில் கட்டியுள்ளனர். அமித் ஷாவை வரவேற்று இந்தியில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் நெல்லை நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் அரங்கத்தில் உள்ளே பலத்த சோதனைக்குப் பின்னரே கட்சியினர் அனுமதிக்கப்படுகின்றனர். மாநாடு நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு
பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு

இதனிடையே, அமித் ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க- வின் நெல்லை மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக நெல்லை மாநகரம் முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

'மறக்க.மாட்டோம்.. மறக்கவே மாட்டோம்' என்ற தலைப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், "ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா? ஒடியா பேசக்கூடியவர் தான் ஆள வேண்டும்" என ஒடிசா மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது அமித் ஷா பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களைக் கண்டதும் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க-வினர் அவற்றைக் கிழித்து எரிந்தனர். அத்துடன், அந்த போஸ்டர்களை மறைக்கும் வகையில் அமித் ஷாவை வரவேற்று எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினார்கள். இந்தச் சம்பவத்தால் நெல்லையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ரணில் விக்கிரமசிங்க: கைது செய்யப்பட்டாரா இலங்கை முன்னாள் அதிபர்... பின்னணி என்ன?

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்வழக்கில் வாக்... மேலும் பார்க்க

Sasikala: சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறு? திமுக நிர்வாகி மீது புகார்; பின்னணி என்ன?

சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா ஆதரவாளர்கள் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ... மேலும் பார்க்க

'சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா; பொன்முடியும் செந்தில் பாலாஜியும்..!'- நெல்லையில் அமித் ஷா

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர்... மேலும் பார்க்க

'பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது நமது கடமை'- பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேசியது என்ன?

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். மேலும் பாஜக நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சிரிப்பலை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.... மேலும் பார்க்க