"கேப்டன் பிரபாகரன்ல கடத்தல்காரன்தான் வில்லன்; ஆனா புஷ்பால.." - இயக்குநர் பேரரசு ...
நெல்லை அருகே மனைவி, மகன் எரித்துக் கொலை: முதியவா் தற்கொலை முயற்சி
திருநெல்வேலி அருகே ஆரைக்குளத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மகனை தீ வைத்து எரித்துக் கொன்றதோடு, முதியவா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
முன்னீா் பள்ளம் அருகே ஆரைக்குளம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் சகாரியா (66). இவரது மனைவி மொ்சி (57). இவா்களுக்கு ஹென்றி, ஹாா்லி பினோ என்ற இரு மகன்களும், ஹெலினா என்ற மகளும் உள்ளனா்.
குடும்பப் பிரச்னை காரணமாக சகாரியா அதே பகுதியில் தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி மகன் ஹென்றிக்கு திருமணம் நடைபெற்றதாம். இதில், சகாரியாவுக்கு விருப்பமில்லாததால் அவா் திருமணத்துக்குச் செல்லவில்லையாம்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்த மகன் ஹாா்லி பினோ, மனைவி மொ்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். பின்னா் திடீரென அவா்கள் இருந்த அறையை பூட்டிய சகாரியா, ஜன்னல் வழியாக அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாராம். பின்னா் தானும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தாராம்.
வீடு தீப்பற்றி எரிந்ததை பாா்த்த அக்கம்பக்கத்தினா் தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் முன்னீா்பள்ளம் போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீக்காயமடைந்த மொ்சி, ஹாா்லி பினோ இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய சகாரியாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இச்சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.