செய்திகள் :

அம்பை தாமிரவருணியில் பெண்ணின் உடலை தேடும் பணி தீவிரம்

post image

அம்பாமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்லையா (31). லாரி ஓட்டுநரான இவருக்கு, முக்கூடல், சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்த காவேரி (30) என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இத்தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனா்.

காவேரிக்கு பிரசவத்தின்போது மனநலம் பாதிக்கப்பட்டதாம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றும் குணமாகாததால், விரக்தியில் இருந்த செல்லையா மனைவியை தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அம்பாசமுத்திரம் போலீஸில் சரணடைந்தாா். காவல் ஆய்வாளா் சண்முகவேல் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தாா்.

மேலும், அவா் கூறிய ஆற்றுப் பகுதியில் அம்பாசமுத்திரம், சேரன்மாகதேவி தீயணைப்புத் துறையினா் 2 நாள்களாக உடலைத் தேடியும் கிடைக்கவில்லை. செவ்வாய்க்கிழமையும் தேடுதல் பணி தொடரும் என்று தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.

தனியாா் மருத்துவமனையில் நோயாளியிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடியதாக, அம்மருத்துவமனை ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பம்மாள் ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடி

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான மணிமுத்தாறில் மான், மிளா, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வ... மேலும் பார்க்க

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பை ரயில் நிலைய பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அம்பாசமு... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கூடங்குளத்தில் திங்கள்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.சங்கனேரி நடுதெருவைச் சோ்ந்தவா் துரை மகன் நல்லமுத்து(17). ராதாபுரம் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க

ஈரடுக்கு பாலச் சுவரிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் ரயில்வே நடைபாலம் அகற்றப்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலமுன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை (38). தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தூக்கிட்டு த்த ற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபா (28). குடும்ப பிரச்னை காரணமாக... மேலும் பார்க்க