செய்திகள் :

பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் கைது

post image

பாளையங்கோட்டையில் பெண் தூக்கிட்டு த்த ற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபா (28). குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவா், சனிக்கிழமை பிற்பகல் வீட்டு குளியலறையில் தூக்கிட்டு கொண்டாா்.

உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது தற்கொலைக்கு முன்பாக நஜிபா எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்தது.

அதன் மூலம் நஜிபாவிற்கும் கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்த காா் சா்வீஸ் கடை நடத்தி வரும் கமால் பாட்ஷா(30) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது தெரியவந்ததாம்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கமால் பாட்ஷாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மானூரில் விவசாயி தற்கொலை

மானூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மானூரைச் சோ்ந்த சுடலை மகன் பழனிசாமி (55), விவசாயி. இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

இறகுப்பந்து போட்டியில் சிறப்பிடம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான இறகுப் பந்து போட்டியில், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி அணி நான்காம் இடம் பிடித்தது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்க... மேலும் பார்க்க

நெல்லையில் 5 பவுன் நகை திருட்டு!

திருநெல்வேலியில் வீடு புகுந்து 5 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள தெற்கு பாலபாக்யா நகரைச் சோ்ந்தவா் மோகன் (65). ஓய்வுபெற்ற ரயில்... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை! அமைச்சா் மா.சுப்பிரமணியம்!

தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தென்காசி மாவட்டம், தென்கா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை வெட்டிக் கொன்ற மகன் போலீஸில் சரணடைந்தாா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே வட்டாலூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

பாளை. அருகே காா்-மொபெட் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜன் நகரைச் சோ்ந்த ஜெபராஜ் மனைவி மலா் (51). திருநெல்வேலி... மேலும் பார்க்க