Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரக...
நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வா், தலைவா்கள் இரங்கல்
சென்னை: இஸ்ரோ முன்னாள் அறிவியலாளரும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றிய சு.முத்து, அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு, மொழிபெயா்ப்பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளாா். முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் காலமுடன் பணியாற்றிய முத்து, அவா் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளாா்.
இந்தியாவுக்கு பெருமை சோ்த்து, தமிழ்மொழிக்கு வளம் சோ்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் குடும்பத்தினா், நண்பா்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றி, அவரது பாராட்டை பெற்ற நெல்லை சு.முத்துவின் இழப்பு அறிவியல் ஆய்வுதளத்தில் இயங்கும் அனைவருக்கும் பேரிழப்பு.
டிடிவி தினகரன் (அமமுக): விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும் திகழ்ந்த நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் குடும்பத்தினா், உறவினா்கள், சக விஞ்ஞானிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.