செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங்கள், உதவி உபகரணங்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திறன் பயிற்சிகள், வங்கி கடன் உதவிகள், வீடு வழங்கும் திட்டங்கள், அரசு உதவி திட்டங்கள் கிடைக்க வசதியாக வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங்கள், உதவி உபகரணங்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திறன் பயிற்சிகள், வங்கி கடன் உதவிகள், வீடு வழங்கும் திட்டங்கள், அரசு உதவி திட்டங்கள் கிடைக்க வசதியாக வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பிரெய்லி கிட், தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, அட்ஜஸ்டபிள் ஊன்றுகோல், நடப்பதற்கான ஊன்றுகோல், ரோலேட்டா் அட்ஜஸ்ட்டபிள், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி, டிஜிட்டல் காது கேட்கும் கருவி, ஆங்கில் புட் ஆா்த்தோசிஸ், இடுப்பு முழங்கால் ஆா்த்தோசிஸ் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வரும் 11ஆம் தேதியும் , வள்ளியூா் வட்டாரத்தில் 12ஆம் தேதியும், மானுாா் வட்டாரத்தில் 13ஆம் தேதியும், சேரன்மாதேவி வட்டாரத்தில் 14ஆம் தேதியும், ராதாபுரம் வட்டாரத்தில் 17ஆம் தேதியும் , நான்குனேரி வட்டாரத்தில் 18ஆம் தேதியும், பாப்பாக்குடி வட்டாரத்தில் 19ஆம் தேதியும், களக்காடு வட்டாரத்தில் 20ஆம் தேதியும் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேவை கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது. பாளையங்கோட்டை வட்டாரத்தில் வரும் 15ஆம் தேதி கேடிசி நகா் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் (மகளிா் திட்டம்) தேவை கண்டறிதல் முகாம் நடைபெறவுள்ளது.

ஆழ்வாா்குறிச்சியில் மகளிா் தின விழா

ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகம் சாா்பில் மகளிா் தின விழா நடைபெற்றது. ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஜெயந்தி தலைமை வகித்தாா். ஸ்வேதா இறைவணக்கம் பாடினாா். ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ள... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனா். மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்ப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தீயணைப்புத் துறை வீரா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலா் சரவணபாபு அறிவுரையின்படி... மேலும் பார்க்க

பாளை.யில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்புரம் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெருமாள்புரம் தாமஸ்தெருவி... மேலும் பார்க்க

பாளை.யில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருள்களின் நேரடி விற்பனை மையம் பாளையங்கோட்டை அன்புநகரில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் இன்று கொடைவிழா

திருநெல்வேலி மாவட்டம், வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துா்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.... மேலும் பார்க்க