செய்திகள் :

நெல்லை: மீட்புப் பணியில் காவலர் மரணம்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; நிவாரணம் அறிவித்த முதல்வர்

post image

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து செங்கல்சூலையில் பணிபுரியும் செய்யதுங்கநல்லூர் மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது நெல்லை அருகே உள்ள வல்லநாடு நான்கு வழிச்சாலை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்தத் தகவல் அறிந்து முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சங்கர் குமார் மற்றொரு காவலர் உடன் சம்பவ இடத்திற்குச் சென்று ரமேஷ் குமாரைச் சிகிச்சைக்காக 108 வாகனத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

காவலர் சங்கர் குமார்
காவலர் சங்கர் குமார்

இந்த மீட்புப் பணியின் போது பாலத்தின் சுவர் அருகே நின்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம் கீழகழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் குமார் பாலத்திலிருந்து 50 அடி ஆழத்தில் உள்ள ஆற்றில் விழுந்ததில் காயம் அடைந்தார்.

ஆற்றில் தண்ணீர் இல்லாத பாறை பகுதியில் விழுந்ததால் அவர் பலத்த காயமடைந்தார். பின் உடன் வந்த காவல்துறை அதிகாரி அவரைச் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரது சொந்த ஊரான கீழகழுநீர்குளத்தில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு நடைபெற்றது.

சிகிச்சை பெற்ற சங்கர் குமார்
சிகிச்சை பெற்ற சங்கர் குமார்

முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் நிவாரணம்

விபத்தில் காயமடைந்தோரை மீட்கச் சென்ற காவலர் இறந்தது வருத்தம் அளிக்கிறது என முதல்வர் இரங்கல் தெரிவித்தவுடன், தனது பொது நிவாரண நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள செய்திக் குறிப்பில், “காவலர் சங்கர் குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சங்கர் குமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் மற்றும் அவருடன் பணிபுரிந்த காவலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கும் 30 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்கி கதவு எப்போது?

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, மும்பை ரயில்வே-க்... மேலும் பார்க்க

தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அரசு சொல்வது என்ன?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின், பின்புற ஆக்சில் உடைந்ததில், சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயங்களுடன்... மேலும் பார்க்க

``ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' - விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

Plane Crash: அகமதாபாத் விமான விபத்து; கருப்பு பெட்டிகள் ஆய்வுக்காக அமெரிக்கா செல்கிறதா?

சேதம் அடைந்த கருப்பு பெட்டிகள்கடந்த ஜூன் 12-ம் தேதி, மதியம் 1:38-க்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சுமார் 1:43 மணியளவில் விபத்தில் சிக்கியது. அந்த போயிங் 171 விமானத்தில் பயணித்த 2... மேலும் பார்க்க

திருச்சி: அரசு பேருந்தும், அரசு வாகனமும் மோதி விபத்து; பரிதாபமாக உயிரிழந்த முசிறி ஆர்டிஓ

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார்.இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை... மேலும் பார்க்க

Air India: ``மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; கருப்புப் பெட்டி..'' - TATA தலைவர் தரும் விளக்கம் என்ன?

குஜராத்தில் ஜூன் 12-ம் தேதியன்று, டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 எண் கொண்ட போயிங் 787-8 ரக விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:38 மணிக்கு 242 பேருடன் லண்... மேலும் பார்க்க