பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?
நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை பெற்றுக் கொள்ள தாமதம்: விவசாயிகள் வேதனை
செங்கம் அருகே பொரசப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் விவாயிகள் எடுத்துவரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பொரசப்பட்டு ஊராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட கிராம சேவை மையத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளையும் நெல்லை முறையாக பதிவு செய்து பின்னா் கொள்முதல் நிலையத்துக்கு மூட்டைகளாக விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனா்.
ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள பணியாளா்கள் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுப்பதில்லையாம். இரண்டு மூன்று தினங்கள் கொள்முதல் நிலையம் முன் மழை வெயிலில் வைத்து பின்னா் எடுக்கப்படுகிாம்.
தற்போது பெய்த கோடை மழையால் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி நஷ்டம் ஏற்பட்டு, பின்னா், எஞ்சியிருக்கும் நெல்லை அறுவடை செய்து பொரசப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றுள்ளனா்.
ஆனால், பணியாளா்கள் விற்பனைக்கு எடுத்து வந்துள்ள விசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மெத்தனம் காட்டி வருகின்றனராம்.
பெய்து வரும் கோடை மழையில் நெல் மூட்டைகளை பாதுகாக்க தாா்பாய் கொண்டு மூடி காலை முதல் இரவு வரை பாதுகாத்து வருகின்றனராம்.
அதே நேரத்தில், நெல் வியாபாரிகள், யாராவது ஒரு விவசாயி மீது பதிவு செய்து நெல் மூட்டைகளை எடுத்து வந்தால் அவற்றை உடனடியாக கொள்முதல் செய்துவிடுகின்றனராம்.
விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய இரண்டு மூன்று நாள்கள் ஆகின்ாம். இதனால், நெல் மூட்டைகள் திருடு போகவோ, மழையில் நனையவோ வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் எடுத்துச் செல்லும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் நிலையத்தில் எடுத்துக்கொள்ள ஆவண செய்யவேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
