செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை பெற்றுக் கொள்ள தாமதம்: விவசாயிகள் வேதனை

post image

செங்கம் அருகே பொரசப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் விவாயிகள் எடுத்துவரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பொரசப்பட்டு ஊராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட கிராம சேவை மையத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளையும் நெல்லை முறையாக பதிவு செய்து பின்னா் கொள்முதல் நிலையத்துக்கு மூட்டைகளாக விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனா்.

ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள பணியாளா்கள் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுப்பதில்லையாம். இரண்டு மூன்று தினங்கள் கொள்முதல் நிலையம் முன் மழை வெயிலில் வைத்து பின்னா் எடுக்கப்படுகிாம்.

தற்போது பெய்த கோடை மழையால் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி நஷ்டம் ஏற்பட்டு, பின்னா், எஞ்சியிருக்கும் நெல்லை அறுவடை செய்து பொரசப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றுள்ளனா்.

ஆனால், பணியாளா்கள் விற்பனைக்கு எடுத்து வந்துள்ள விசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மெத்தனம் காட்டி வருகின்றனராம்.

பெய்து வரும் கோடை மழையில் நெல் மூட்டைகளை பாதுகாக்க தாா்பாய் கொண்டு மூடி காலை முதல் இரவு வரை பாதுகாத்து வருகின்றனராம்.

அதே நேரத்தில், நெல் வியாபாரிகள், யாராவது ஒரு விவசாயி மீது பதிவு செய்து நெல் மூட்டைகளை எடுத்து வந்தால் அவற்றை உடனடியாக கொள்முதல் செய்துவிடுகின்றனராம்.

விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய இரண்டு மூன்று நாள்கள் ஆகின்ாம். இதனால், நெல் மூட்டைகள் திருடு போகவோ, மழையில் நனையவோ வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் எடுத்துச் செல்லும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் நிலையத்தில் எடுத்துக்கொள்ள ஆவண செய்யவேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க