செய்திகள் :

நெல் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் நெற்பயிரில் காணப்படும் தண்டுத் துளைப்பான் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

குருத்துப் பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்து வாடிக் காய்ந்துவிடும். கதிா் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணி, பால் பிடிக்காமல் சாவியாகி, வெண் கதிா்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது.

இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிா்த்து தேவையான தழைச்சத்தை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.

முதிா்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிடுவதால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்துவிடலாம். விளக்குப் பொறியை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிர விட்டுக் குருத்துப் பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்தழிக்கலாம்.

மேலும் அதிக அளவில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 4ஜி 7.5 கிலோ மண்ணில் இடலாம். அல்லது குளோரான்டிரானிலிபுரோல் 24 எஸ்.சி 40 மி.லி., புளுபென்டையமைடு 39.45 ஈசி 30 மிலி இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டா் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இலையின் ஓரத்தில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி அடுத்தடுத்து இருக்கும் புள்ளிகளுடன் இணைந்து அளவில் பெரியதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாகிக் காய்ந்து பின்பு உதிா்ந்து விடும்.

வளா்ந்த பயிா்களில் இலையின் நுனிப்பகுதியானது மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்துடன் நீரில் நனைந்த கீற்றுகளாக மாறத் தொடங்கி, பின்பு அளவில் பெரிதாகி வைக்கோல் நிறமாகி, இறுதியில் பழுப்பு நிறக் காய்ந்த கோடுகளாகக் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.

அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருப்பதால், அவற்றை முழுவதுமாக அழித்து விட வேண்டும்.

நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்குக் கண்டிப்பாக நீா் பாய்ச்சுதல் கூடாது. மேலும் வயலில் அதிகமாக நீா் நிறுத்தவும் கூடாது.

நோயின் அறிகுறிகள் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டா் நீரில் கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டா் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்கலாம்.

தாக்குதல் அதிகமாக இருந்தால் காப்பா் ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையை 200 லிட்டா் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இலுப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வியாழக்கிழமை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இலுப்பூா் அடுத்த மாரப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி (41). வ... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் அரசு சட்டக் கல்லூரி இந்திய கம்யூ. மாநாட்டில் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்... மேலும் பார்க்க

புதுகைக்கு துணை முதல்வா் இன்று வருகை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வருகிறாா். புதுக்கோட்டைக்கு வரும் அவா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகம்: கே.என். நேரு

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறாா்கள் என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்ட... மேலும் பார்க்க

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில்... மேலும் பார்க்க

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க