செய்திகள் :

'நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைக்கிறேன்...' - காரணம் சொல்லும் நெதன்யாகு!

post image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.

நேற்று, அவர் வெள்ளை மாளிகையில் பேசும்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் பேசியதாவது...

"நாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் ஒரு நாட்டில், ஒரு பகுதிக்கு அடுத்த பகுதி என அமைதியை உருவாக்கி வருகிறார்.

அதனால், நோபல் பரிசு கமிட்டிக்கு, நான் எழுதிய கடிதத்தை உங்களுக்கு தர விரும்புகிறேன்.

இது உங்களை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த கடிதம் ஆகும்".

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு
அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு

தீயைப் பற்ற வைத்த பாகிஸ்தான்

'ட்ரம்பிக்கு நோபல் பரிசு' என்ற தீயை முதன்முதலில் பற்ற வைத்தவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். அவர் கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, இதை குறிப்பிட்டார்.

இதற்கு பரிசாக, அவருக்கு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் விருந்து கொடுத்தார்.

ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கூறியிருந்தார்.

இப்போது இஸ்ரேல் பிரதமரும் பரிந்துரைந்திருக்கிறார்.

ட்ரம்பிற்கு நோபல் பரிசு ஆசை உள்ளது தான்.

ஆனால், அவருக்கு அந்தப் பரிசு கிடைக்குமா... கிடைக்காதா என்பது நோபல் பரிசு கமிட்டியின் கையில் தான் உள்ளது.

கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே காரணம்'' - இபிஎஸ்

கடலூரில் இன்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி மற்றும் ஆறாம் வகுப்பு நிவாஸ் ஆ... மேலும் பார்க்க

UP: 7-ம் வகுப்பு மாணவிக்கு யோகி ஆதித்யநாத் அளித்த நம்பிக்கை; மறுத்த பள்ளி நிர்வாகம் - என்ன நடந்தது?

பன்குரி திரிபாதி என்ற 7-ம் வகுப்பு மாணவி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தனது கல்விக்கு உதவி கேட்டது, அந்த மாநிலத்தில் அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. பன்குரியின் தந்தை ராஜீவ் குமார... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ். விவசாயிகளின் குரலோடு தொடங்கிய பயணம்

நேற்று, ஜூலை 7, 2025 அன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் உற்சாகத்தோடு தொடங்கியது எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’அதிமுக பொதுச் செயலாளரும், சட்... மேலும் பார்க்க

Secularism: `மதச்சார்பின்மையை நீக்க நினைக்கும் பாஜக' - என்ன தான் பிரச்னை? | ஓர் அலசல்

``சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற இரண்டு சொற்களை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்ததன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. நாம் நடுநிலையாக இருந்தால், சத்திரங்களுக்கு (வைணவ மடங்கள... மேலும் பார்க்க

ட்ரம்ப் 15 நாடுகளுக்கு கடிதம்; `Just Miss' ஆன இந்தியா! இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தத்தின் நிலை என்ன?

ஏப்ரல் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று, இப்போது மீண்டும் ஹெட்லைன்களில் இடம்பெற தொடங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 'பரஸ்பர வரி'யின் மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் நாளை அற... மேலும் பார்க்க