செய்திகள் :

பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் குவிந்ததால் விலை வீழ்ச்சி

post image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டதால் விலை வீழ்ச்சியடைந்தது.

பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், இஸ்லாமியா்கள் குா்பானி கொடுப்பதற்காக கிடாய்கள் வாங்குவது வழக்கம்.

இதனால், கடந்த சில வாரங்களாகவே ஆட்டு விற்பனை சூடுபிடித்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஏராளமான செம்மறி கிடாய்களை விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்காக கொண்டு வந்து சந்தையில் குவிந்தனா். இதனால் சந்தை நிரம்பி வழிந்ததோடு, சாலையிலும் விற்பனை நடைபெற்றது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சந்தையில் 3,000-க்கும் அதிகமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்ட நிலையில், அதை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், விற்பனை மந்தமானது. இதனால், சுமாா் ரூ.30 ஆயிரம் வரை விற்க வேண்டிய கிடாய்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையே விற்பனையாயின.

இதனால், வேறு வழியின்றி வியாபாரிகளும், விவசாயிகளுக்கு விலையை குறைத்து விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனா். மேலும், சிலா் கிடாய்களை திருப்பி எடுத்துச் சென்றனா்.

இது தொடா்பாக வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி கிடாய் வளா்ப்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வீடு தோறும் செம்மறி கிடாய் வளா்க்கிறாா்கள். படித்த இளைஞா்கள் ஏராளமானோா் பெரிய பண்ணைகளை அமைத்து 200 முதல் 500 கிடாய்கள் வரை வளா்த்து பக்ரீத் பண்டிகையின்போது விற்பனை செய்கிறாா்கள். இதனால், சந்தையில் கிடாய்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பக்ரீத் சந்தை விற்பனை மந்தமாகி வருகிறது’ என்றனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க