செய்திகள் :

பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!

post image

அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது பற்றி இஸ்ரேல் அதிகாரிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் 3 ஆணு சக்தி மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொண்டன. இதி அந்த மையங்கள் கடுமையாகச் சேதமடைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. தாக்குதல் வெற்றி என்றும், போர் விமானங்கள் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அணுசக்தி மையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்திருந்து, யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

இதையே, இஸ்ரேலிய அதிகாரிகளும் உறுதி செய்திருக்கிறார்கள். அதாவது, ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்து யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு இடம்மாற்றியிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

400 கிலோ கிராம் எடையுள்ள யுரேனியத்தையும், அதில் 60 சதவீதம் செரிவூட்டப்பட்ட யுரேனியமும் இருந்துள்ளது. மேலும் 90 சதவீத தளவாளங்களும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈரானுக்கு, அமெரிக்கப் படைகளை அனுப்புவது குறித்து முடிவெடுக்க நேரம் கேட்டிருந்தபோதே, ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால், அணுக் கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று உலகமே அஞ்சிய நிலையில், அதுபோன்ற எந்த அபாயத்துக்குரிய பொருள்களும் அங்கு இல்லை என்று ஈரான் தெரிவித்திருப்பதே இதனை உறுதி செய்வதாகவும் தெரிகிறது. அமெரிக்கா தாக்குதலில் முதல் இலக்காக ஃபார்டவ் இருந்துள்ளது. இங்கு அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம் என்று நம்பப்படுவதே அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்குத் தடை விதிக்கும் இஸ்ரேல்!

உண்மையை மறைப்பதற்காக காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரிட்டன் தேசிய செய்தித்தாளின் இளம் ஆசிரியராக இருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பியர்ஸ் மோர்கன் இதனைத் த... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது பிரான்ஸ்!

ஈரான் உடன் போரில் ஈடுபட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.இது குறித்து பேசிய பிரெஞ்சு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே: ஃபரூக் அப்துல்லா கண்டனம்!

ஸ்ரீநகர்: அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே என்று ஃபரூக் அப்துல்லா பேசியிருக்கிறார். இதன்மூலம், தேசிய மாநாட்டு(என் சி) கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அரபு நாடுகளுக்கு இன்று(ஜூன் 23) எச்சர... மேலும் பார்க்க

ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது பதற்றமான சூழலை பிரதிபலிக்கவில்லை எனவும் கத்... மேலும் பார்க்க

ஈரானுக்கு உதவத் தயார்! அமெரிக்க தாக்குதலுக்கு கடும் கண்டனம்! - ரஷியா

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன்... மேலும் பார்க்க

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குத... மேலும் பார்க்க