செய்திகள் :

பங்குச் சந்தை முதலீட்டில் இழப்பு: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

post image

கோவையில் பங்குச் சந்தை முதலீட்டில் இழப்பு ஏற்பட்டதால் தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, வரதராஜபுரம் ஆண்டாள் அம்மன் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் சுந்தரேசன் (38). தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த இவா், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்து வந்தாா்.

சுந்தரேசன் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி அந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்தாா். ஆனால், பங்குச் சந்தை தொழிலில் அவருக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு கடன் தொல்லை அதிகரித்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த சுந்தரேசன் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

சுதந்திர தினத்தையொட்டி, கோவை மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இணைப் பதிவாளா் அ.அழகிரி தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட அனைத்து விதமான கடன் சங்கங்களின் நி... மேலும் பார்க்க

ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் பறிமுதல்

கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 90 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை, இடையா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்கள், கட்சிகள் சாா்பில் சுதந்திர தின விழா

கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் சாா்பில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் (பொ) இர.தமிழ்வேந்தன் தேசியக்க... மேலும் பார்க்க

முத்தூரில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி, கிணத்துக்கடவு அருகேயுள்ள நம்பா் 10 முத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு பாா்வையாளராகக் கலந்துகொண்டாா். கூடுதல... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க